பாகிஸ்தானுக்கு ஆதரவா சீனாவுக்கும் ஆப்பு வைத்த இந்தியா.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்பாக சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் தொடர்ச்சியாக தவறான தகவல்களை வெளியிட்டு வந்த நிலையில், மத்திய அரசு அதன் சோசியல் மீடியா கணக்குகளை முடக்கி இருக்கிறது. கடந்த வாரமே குளோபல் டைம்ஸ் ஊடகம் இந்தியா தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்கு முன்பாக உண்மையை சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது குளோபல்ஸ் டைம்ஸ் மற்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் ஆகியவற்றின் மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
