பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு

497549171_1011747591102942_5351106646653979893_n.jpg

மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும்

பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அனைவரையும் பதைபதைக்கச் செய்தன. மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சி.பி.ஐ., விசாரணை நடத்திய இந்த வழக்கில், சபரிராஜன்,32, திருநாவுக்கரசு,34, சதீஷ்,32, வசந்தகுமார்,30, மணிவண்ணன்,32, பாபு,33, ஹெரன்பால்,32, அருளானந்தம்,38, மற்றும் அருண்குமார்,32, ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, 2019ம் ஆண்டு மே, 21ல் கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு ‘இன்கேமரா’ முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு அளிக்கிறார்.

இதற்கென சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒன்பது பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதையொட்டி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The current image has no alternative text. The file name is: 497549171_1011747591102942_5351106646653979893_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *