பிரதமர் மோடி விடுத்த பகிரங்க எச்சரிக்கை பாகிஸ்தான் அழிந்துவிடும்

495372807_1011466924464342_2329479567761224635_n.jpg

பாகிஸ்தான் அழிந்துவிடும்.. பிரதமர் மோடி விடுத்த பகிரங்க எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவமும், அங்குள்ள அரசாங்கமும் பயங்கரவாதம் செழிக்க உதவுவது தொடர்ந்தால் அதுவே ஒரு நாள் பாகிஸ்தானை முடிவுக்குக் கொண்டுவரும். பாகிஸ்தான் தப்பிக்க வேண்டுமென்றால், அது பயங்கரவாத உள்கட்டமைப்பை ஒழிக்க வேண்டும், என்று

பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது, ​​பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் நடுங்கியது. பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 9/11 மற்றும் இந்தியாவில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட உலகில் நடந்த அனைத்து பெரிய

பயங்கரவாத தாக்குதல்களும் இந்த பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை.நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. அந்த தாக்குதல் என்னை தனிப்பட்ட வகையில் உலுக்கியது. என்னை கவலையில் ஆழ்த்தியது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது

அழித்துவிடும்.பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது. 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி

ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில், பயங்கரவாதிகள் காட்டிய காட்டுமிராண்டித்தனம் நாட்டையும் உலகையும் உலுக்கியுள்ளது. இயற்கையை கொண்டாடிக் கொண்டிருந்த அந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் மதம் குறித்து கேட்ட பிறகு, அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா

தன்னுடைய எதிர்ப்பையும், பலத்தையும் முழுமையாக காட்டியுள்ளது பாகிஸ்தானில் நேரடியாக தாக்குதல் நடத்தினோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் பயிற்சி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். டிரோன்கள் ஏவுகணைகள் மூலம் நாங்கள் தாக்குதல் நடத்தினோம். இப்படி ஒரு முடிவை இந்தியா எடுக்கும் என பயங்கரவாதிகள்

நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். 100-க்கும் அதிகமான தீவிரவாதிகளை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் அழித்தோம். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு நீதி வழங்க ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக நின்றது. பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் அங்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த

பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது. கடந்த சில நாட்களில் நாட்டின் திறமையையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நான் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். தாக்குதல் நடத்த அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். இன்று, இந்த வீரம், துணிச்சல், ஆயுதப் படைகளின்

தைரியத்தை நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், நாட்டின் ஒவ்வொரு சகோதரிக்கும், நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

The current image has no alternative text. The file name is: 495372807_1011466924464342_2329479567761224635_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *