பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு மையம் திறந்த இந்தியா.. சிறப்பே இதுதான்

495380456_1010587307885637_5671525653841409432_n.jpg

எதிரி நாடுகளின் இலக்குகளை துல்லியமாக அழிக்கம் அதிக சக்தி கொண்ட பிரமோஸ் ஏவுகணையை நம் நாடு, ரஷ்யாவுடன் சேர்ந்து தயாரித்தது. இந்த ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தானின் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் தான் பிரேமாஸ் ஏவுகணையை தயாரிக்கும் புதிய யூனிட்டை உத்தர பிரதேச மாநிலம்

லக்னோவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இங்கு ஆண்டுக்கு 80 முதல் 100 ஏவுகணைகள் தயாரிக்கப்பட உள்ளதால் இனி நம் நாட்டை எதிரிகளால் சீண்ட முடியாது. இந்த பிரமோஸ் ஏவுகணை என்பது என்ன? பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. நேற்றை தினம் நம் நாடு ஏவுகணையை வீசி பாகிஸ்தானின் முக்கிய 3 விமானப்படை தளங்களை அழித்தது. பாகிஸ்தானில் உள்ள

விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர்கான், ஷார்காட்டில் உள்ள ரஃபிக்கி விமான தளம் மற்றும் சாக்வால் பகுதியில் உள்ள முரித் விமானதளங்கள் மீது நம் நாடு அதிரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.இந்த தாக்குதலுக்கு நம் நாடு பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தி தான் இந்தியா துல்லியமான

தாக்குதல் நடத்தி தங்களின் விமானப்படை தளங்களை அழித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இருநாடுகள் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் ஒன்று தரப்பட்டது. அதில் ‛‛”சர்வதேச எல்லையைத் தாண்டி பல இடங்களில் பிரமோஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டது. இதையடுத்து ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51ன் கீழ் தற்காப்புக்காக நாங்கள் பதிலடி கொடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இதனால் “ஆபரேஷன் பன்யான்-உல்-மர்சூஸ்” என்ற பெயரில் தாக்கினோம்” என்று தெரிவித்து இருந்தது. இருப்பினும் பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தியது பற்றி நம் நாட்டின் சார்பில்

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இதற்கிடையே தான் பிரமோஸ் ஏவுகணையின் தொழிற்சாலை யூனிட்டை இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு யூனிட் என்பது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி காட்சி மூலம் இன்று ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த யூனிட் என்பது மொத்தம் 300 கோடி செலவில ்அமைக்கப்பட்டுள்ளது. ‛டிபென்ஸ் இன்டஸ்ட்ரியல் காரிடார்’ என்பதன்

ஒருபகுதியாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்கான அறிவிப்பு என்பது கடந்த 2018 ம் ஆண்டில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு அடிக்கல் என்பது கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் மோடியால் நடப்பட்டது. தற்போது பிரமோஸ் உற்பத்தி மைய யூனிட்டின் பணி முடிவடைந்து அது திறக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ‛டிபென்ஸ் காரிடார் திட்டத்தின்’ கீ் மொத்தம் 1,600 ஹேக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதில் 80 ஏக்கரில் பிரமோஸ் ஏவுகணை யூனிட் என்பது அமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின்

பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் டிஆர்டிஓ (Defence Research and Development Organisation) மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்ட்ரோயேனியா (NPO Mashinostroyeniya) கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டை பாதுகாப்பு துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். ஏனென்றால் பிரமோஸ் ஏவுகணை என்பது அதிக சக்திவாய்ந்தது. எதிரி நாடுகளில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் சக்தி கொண்டது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 80 முதல் 100 பிரமோஸ் ஏவுகணை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இனி எதிரிகளால் நம் நாட்டை நெருங்க முடியாது. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் நம்மை சீண்டினால் பிரமோஸ் ஏவுகணையை வைத்து நம்மால் அவர்களை துல்லியமாக தாக்க முடியும்.

The current image has no alternative text. The file name is: 495380456_1010587307885637_5671525653841409432_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *