பல ஆயிரம் கோடி பிசினஸ் பரபரப்பு தகவல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இறங்கிய சீனா..பின்னணியில்

495795038_1010441481233553_9042839172886809766_n.jpg

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றைய தினம் பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து நம் நாடு போரை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்பி உள்ளது. இதற்கிடையே தான் சீனா, பாகிஸ்தான்

பக்கம் நிற்பதாக அறிவித்துள்ளது. போர் நடக்கும்போது அமைதியாக இருந்த சீனா, போர் நிறுத்தத்துக்கு பிறகு பாகிஸ்தான் பக்கம் சாய்ந்துள்ளது ஏன்? பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானை விட்டு கொடுக்காமல் நம் நாட்டை சீண்டுவது ஏன்? என்பதன் பின்னணியில் பல லட்சம் கோடி பிசினஸ் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது. போர் நிறுத்தம்

அமலான பிறகும் கூட பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டியது. இதற்கு நம் படை வீரர்கள் உரிய முறையில் பதிலடி கொடுத்தனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த புதன் கிழமை முதல் 4 நாட்களாக தொடர்ந்து பதற்றம் என்பது ஏற்பட்டு வந்தது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு நம் படை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதையடுத்து நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது. நேற்றைய தினம் பாகிஸ்தானில் 3 விமானப்படை தளங்கள் ஏவுகணைகளை ஏவி நாம்

அழித்தோம். இதனால் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் என்பது அதிகரித்தது. இதையடுத்து நேற்று பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து போர் நிறுத்தத்துக்கு நம் நாடு சம்மதம் தெரிவித்தது. தற்போது இருநாடுகள் இடையே அமைதி திரும்ப தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் இந்தியா – சீனா இடையேயான மோதல் தீவிரமாக இருந்தபோது பதுங்கிய சீனா நேற்று வெளியே வந்தது. போர் நிறுத்தம் மேற்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்ட பிறகு சீனா இந்தியா- பாகிஸ்தானிடம் பேசியது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது பாகிஸ்தானுடன் சீனா

உறுதியாக நிற்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்கவும் பிராந்திய ஒருமைப்பாட்டு மற்றும் தேசிய சுதந்திரத்திற்காக உறுதியாக தொடர்ந்து துணை நிற்போம் என்று வாய்க்கொழுப்புடன் உறுதியளித்துள்ளது சீனா.பொதுவாகவே இந்தியா, பாகிஸ்தான் என்று வந்துவிட்டால் சீனா எப்போதும் பாகிஸ்தான் பக்கம் தான் நிற்கிறது. ஏனென்றால் பாகிஸ்தான் தான் சீனாவின் நட்பு நாடாக உள்ளது. மறுபுறம் இந்தியா – சீனா இடையேயான உறவு என்பது அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இப்போது போர் நிறுத்தத்துக்கு பிறகு சீனா,

பாகிஸ்தானுடன் நிற்பதாக பகிரங்கமாக அறிவித்து இருப்பதன் பின்னணியில் பல லட்சம் கோடி பிசினஸ் உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:சீனாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இருநாடுகள் இடையே கடந்த 1951ம் ஆண்டு முதல் நெருங்கிய உறவு இருந்து வருகிறது. அரசியல், பெரளாதாரம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது சீனாவில் பாகிஸ்தான் ஏராளமாக முதலீடு செய்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் சிபிஇசி திட்டத்தின் கீழ்

உள்கட்டமைப்பு, எனர்ஜி மற்றும் வர்த்தக முன்னேற்றத்துக்காக முதலீடு செய்துள்ளது. இதற்காக சிபிஇசி என சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்ற பெயரில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய திட்டம் என்பது சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் பாகிஸ்தான் முக்கிய கூட்டாளி. அந்நாட்டில் துறைமுகங்கள், சாலைகள் மற்றும் ஆற்றல் திட்டங்களுக்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலரை சீனா வாரி இறைத்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என்று சீனா நம்புகிறது. தற்போது போர் வந்துவிட்டால் இந்த திட்டத்தின் முதலீடுகள் எல்லாம் வீணாகிப்போய்விடும். இதனால் இந்தியாவுக்கு

எதிராக பாகிஸ்தானுடன் கைகோர்த்துள்ளது சீனா. அதேபோல் பாகிஸ்தான் தான் சீனாவிடம் இருந்து அதிகப்படியான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது. பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் சுமார் 80 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இதில் போர் விமானங்கள், வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம், நீர்மூழ்கி கப்பல்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவை அடங்கும். சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து ஜேஎப் – 17 தண்டர் ரக போர் விமானம், பயிற்சி விமானம் மற்றும் போர்க்கப்பல்களை இணைந்து தயாரித்து வருகிறது.

இதுதவிர விண்வெளி தொழில்நுட்பம், சேட்டிலைட் நேவிகேஷன், ஏவுகணை பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் இருநாடுகளும் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.அதேபோல் கடந்த 2024ம் ஆண்டில் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே 23.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது 11.1 சதவீதம்அதிகமாகும். அதோடு பாகிஸ்தானுக்கான சீனாவின் ஏற்றுமதி என்பது 17 சதவீதம் வரை அதிகரித்து 20.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது. மாறாக பாகிஸ்தானில் இருந்து சீனாவின் இறக்குமதி என்பது 18.2 சதவீதம் குறைந்து 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்று இருந்தது. குறிப்பாக எலக்ட்ரிக்கல் மெஷினரி

உள்ளிட்டவை தான் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிகமாக 5.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு செல்கிறது. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து வருவதோடு, இறக்குமதி குறைந்து வருவதால் பாகிஸ்தானை வைத்து சீனா நன்றாக கல்லா கட்டுகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து கனிமவளங்களை சீனா கொள்ளையடித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து சீனா 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு காப்பரை வாங்கி வருகிறது. தற்போது போர் வந்துவிட்டால் எளிதாக நம் நாடு பாகிஸ்தானின் கதையை முடித்துவிடும். இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானை வைத்து சீனா போட்ட திட்டங்கள் எல்லாம் வீணாகிவிடும்.

அதேபோல் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் எல்லாம் ஆற்றில் போட்ட கதையாகவிடும். இதனால் போர் நிறுத்தத்தை தொடர்ந்து சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக நம் நாடு தான் பொருளாதாரத்தில் சிறந்த நிலையில் உள்ளது. இதனால் சீனா நம் நாட்டின் வளர்ச்சியை விரும்பவில்லை. இதனால் நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து சீனா செயல்பட்டு வருகிறது. இப்போதும் பாகிஸ்தானின் பக்கம் சாய்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா – பாகிஸ்தான்

இடையேயான மோதலில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது பாகிஸ்தான் பக்கம் சீனா சாய்வதன் பின்னணியிலும் முக்கிய காரணம் உள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல கட்டங்களாக 145 சதவீதம் வரை சீனாவின் பொருட்களுக்கு வரி விதித்தார். இதற்கு போட்டியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு 125 சதவீத வரியை விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே கடும் வர்த்தக போர் ஏற்பட்டது. இதனால் அமெரிக்காவில் சீனா தனது பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பிரச்சனையை எதிர்கொண்டது. இது சீனாவின் வர்த்தகத்தை

பெரிதும் பாதித்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவிற்கு பதில் நம் நாட்டின் மார்க்கெட்டை பிடிக்க சீனா திட்டமிட்டது. இதனால் தான் சீனா, பாகிஸ்தான் – இந்தியா இடையோன மோதல் உச்சத்தில் இருந்தபோது அமைதியாக இருந்தது. மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் இந்தியாவின் மார்க்கெட் கிடைக்காது என்ற காரணத்தால் சீனா பம்மியது. ஆனால் தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததோடு, டொனால்ட் டிரம்பும் சீனாவுக்கு விதித்த 145 சதவீத வரியை 80 சதவீதமாக குறைக்க பரிசீலனை செய்து வருகிறார். இதனால் சீனாவுக்கு திமிர் வந்து பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து நம் நாட்டை சீண்ட தொடங்கி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

The current image has no alternative text. The file name is: 495795038_1010441481233553_9042839172886809766_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *