லாகூர், கராச்சி, ராவல்பிண்டி மீது தொப் தொப்பென்று விழும் ட்ரோன்கள்.. அலறல்.. அணிவகுத்த ஆம்புலன்ஸ்கள்
�
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களுக்கு எதிராக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூரை’ (Operation Sindoor) வெற்றிகரமாக நடத்தியது. இந்த துல்லியமான தாக்குதலால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்தது. இதன் பின்னர் பாகிஸ்தான் தனது நாசகார திட்டத்துடன் இந்தியாவின் 15 முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்த முயன்றது. ஆனால், இந்தியாவின் சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ஒவ்வொரு தாக்குதலையும் வான்வெளியிலேயே முறியடித்து,
�
பாகிஸ்தானின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.பாகிஸ்தானின் கோழைத்தனமான முயற்சிக்கு பதிலடியாக இந்தியா வலிமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனிடையே ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி போன்ற பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் இன்று நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் பெரும் சேதமடைந்தன. வானில் இருந்து விழும் ட்ரோன்களை தடுக்க முடியாமல் பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு அம்சம் குழம்பிப்போய் உள்ளது.கராச்சியில்
�
ட்ரோன் தாக்குதல் கராச்சியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், காலை 10 மணியளவில் ஒரு ட்ரோன் வந்து நேரடியாக ஒரு வீட்டின் கூரையில் மோதியது. இதனால் கூரை முழுவதும் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் மின் கம்பிகளும் பெரும் சேதமடைந்ததால் கராச்சி முழுவதும் இருளில் மூழ்கியது. தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பகுதி முழுவதும் பதற்றமும் குழப்பமும் நிலவியது. கராச்சியிலிருந்து வெளிவந்த படங்களில், ஒரு வீட்டின் கூரை முற்றிலும் சேதமடைந்திருப்பதையும், வீட்டிற்குள் இருந்த பொருட்களும் சேதமடைந்திருப்பதையும் காணலாம்.லாகூரிலும்
�
பரபரப்பு இதே போன்ற பதற்றமான காட்சிகள் லாகூரிலிருந்தும் வெளிவந்துள்ளன. இங்கு ஒன்றன்பின் ஒன்றாக பல ஆம்புலன்ஸ்கள் சைரன்களுடன் சாலையில் செல்வதைக் காண முடிந்தது. மேலும், போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் விரைந்து சென்றன. லாகூரில் அவசரகால சைரன்களின் ஒலிகளும் கேட்டன. நகரத்தின் பல முக்கிய கட்டிடங்கள் ட்ரோன் தாக்குதலால் பெரும் சேதமடைந்தன. இந்தியாவின் பதிலடிக்குப் பிறகு, பாகிஸ்தான் நாடு முழுக்க ஒருவித பரபரப்பான சூழல் காணப்பட்டது.இந்தியா, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பைத் தகர்த்தது
�
இன்று திடீரென நடைபெற்ற ஒரு டிரோன் தாக்குதலில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானமும் சேதமடைந்துள்ளது. இங்கு அன்று இரவு பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டி நடைபெறவிருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) அவசரக் கூட்டத்தில், ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த மீதமுள்ள PSL போட்டிகளை கராச்சிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு முழுமையாகச் செயலிழந்தது என்பதே இதன் மூலம் உறுதியாகிறது.பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் இருந்தும் சில திக் திக் காட்சிகள் வெளிவந்துள்ளன. இங்கு
�
அதிகாலையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் திடீரென அச்சத்தில் வேகமாக போகத் தொடங்கின. ஆனால் இன்னும் கூட பாகிஸ்தான் திருந்தவில்லை. ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும், இந்திய தாக்குதலால் பீதியடைந்த எம்.பி.க்கள் கண் கலங்கி, அழுத காட்சிகளும் காணப்பட்டன. 15 நகரங்களைக் குறிவைத்த முயற்சி முறியடிப்பு பாகிஸ்தான், இந்தியாவின் முக்கிய நகரங்களான அவந்திபோரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அம்ரித்சர், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்ப்பூர், பதிண்டா,
�
சண்டிகர், நால், பலோடி, உத்தர லாய் மற்றும் புஜ் ஆகிய 15 நகரங்களில் தாக்குதல் நடத்த முயன்றது. பாகிஸ்தானின் இந்த ஆபத்தான திட்டத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் புதன்கிழமை இரவு அதிநவீன S-400 வான் பாதுகாப்பு அமைப்பைத் தயார் நிலையில் நிறுத்தி, பாகிஸ்தானின் அனைத்து வான்வழித் தாக்குதல்களையும் திறம்பட முறியடித்து, நாட்டின் பாதுகாப்பு அரணாக நின்றது.ஆபரேஷன் சிந்தூரின்’ கீழ், இந்தியா பயங்கரவாதத் தளங்களை மட்டுமே குறிவைத்தது. இது திட்டமிடப்பட்ட மற்றும் மிகவும் கவனமாக நடத்தப்பட்ட ஒரு பொறுப்பான ராணுவ நடவடிக்கை.
�
ஆனால் பாகிஸ்தான் இதற்குப் பழிவாங்க இந்தியாவின் பொதுமக்கள் வசிக்கும் 15 நகரங்களைத் தாக்க முயன்று தனது கோர முகத்தைக் காட்டியது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதை யார் நடத்தினார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால், பாகிஸ்தானின் பலவீனமான வான் பாதுகாப்பு அமைப்பை இது அம்பலப்படுத்தியுள்ளது.
