பாகிஸ்தான் உள்ளே ஏவுகணை போன.. அதே நொடியில்.. எல்லையில் அரணாக பறந்த இந்திய போர் விமானங்கள்
�
பாகிஸ்தான் உள்ளே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய போது.. இந்திய போர் விமானங்கள் எல்லையில் அரணாக பறந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம்.அங்கு
�
தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 9 இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.போர் விமானங்கள் பாதுகாப்பு
�
இதற்கு இடையே பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது . அதாவது பாகிஸ்தான் உள்ளே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய போது.. இந்திய போர் விமானங்கள் எல்லையில் அரணாக பறந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கே போர் பயிற்சிகளை இந்திய போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் நடத்தின.பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொள்ள இந்திய கடற்படையின் chopperகள் அதவாது ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.
�
கடந்த 4 மாதங்களாக அங்கே ரோந்து நடக்காமல் இருந்தது.இப்போது இலகு ரக நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்ட ரோந்து ஹெலிகாப்டர்களை களமிறக்கி உள்ளனர். ரோந்து பணிகளை ஆக்டிவேட் செய்யுங்கள் என்று பாதுகாப்பு துறை உத்தரவிட்டதால் பாதுகாப்பு பணியில் கடற்படையும் களமிறங்கி உள்ளது. இதற்கு காரணம் உள்ளது. காரணம் என்ன? இந்திய ஏவுகணைகள் உள்ளே சென்ற போது பாகிஸ்தான் உடனே பதிலடி தரும். தரைவழி பதிலடி தந்தால் ராணுவம் மறுபதிலடி தரும். அதுவே ஏவுகணை அட்டாக் செய்தால் எல்லையில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்புகள் பதிலடி தரும்.
�
ஆனால் போர் விமானங்கள் உள்ளே வந்தால் அதனுடன் சண்டை போட போர் விமானங்கள் களமிறக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது . அதாவது பாகிஸ்தான் உள்ளே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய போது.. இந்திய போர் விமானங்கள் எல்லையில் அரணாக பறந்து கொண்டே எல்லையை காத்தது. எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க
�
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அனைத்து வான் பாதுகாப்பு பிரிவுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுக்க உள்ள எல்லா பகுதிகளிலும் எங்கெல்லாம் போர் விமானங்கள் பாதுகாப்பு மேற்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் போர் விமானங்கள் தற்போது வலம் வந்து கொண்டு இருக்கின்றன. பாகிஸ்தானின் பதிலடியை எதிர்பார்த்து இந்த போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.
