வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து

495110814_1007180674892967_4412659708200433819_n.jpg

சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நகை வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து காரில் தப்பிய 4 பேர் கும்பலை அடுத்த 12 மணி நேரத்தில் தூத்துக்குடியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ரூ.23 கோடி வைரம் கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்து கைதான விஜய் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுபற்றி வெளியான தகவல்களை பார்ப்போம் சென்னையில் வைர வியாபாரி சந்திரசேகர் என்பவர் வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். அப்போது நகை வாங்குவது போன்று வந்த 4 பேர் கும்பல், அவரது அறைக்கு சென்றனர். பின்னர் அவரது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு ரூ.23 கோடி மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.12 மணி நேரத்தில் கைது வைர நகையை கொள்ளை அடிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட 4 பேர்

கும்பல் அடுத்த 12 மணி நேரத்தில் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை திட்டம் எப்படி அரங்கேறியது என்பதை கைதான விஜய் என்பவர் போலீசில் அளித்த தகவல்களை பார்ப்போம். பெரிய கமிஷன் சென்னை அண்ணா நகரில் வசிக்கும் சந்திரசேகர் என்ற வைர வியாபாரியிடம் விலை மதிப்புள்ள பழங்கால வைரக்கல் ஒன்று இருப்பதாக கடந்த வாரம் என்னுடைய நண்பர் ராகுல் என்பவர் கூறினார். மேலும் அந்த வைரத்தை அவர் விற்பனை செய்ய உள்ளதாகவும், விற்பனை செய்துக் கொடுத்தால் பெரிய அளவில் கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் நண்பர்

ராகுல் கூறினார். வைரக்கல் ராகுல் கூறியதன் பேரில் எனது நண்பர்களான ஜான் லாயட் என்பவரையும், ரதிஷ் என்பவரையும் அழைத்துக் கொண்டு வைர வியாபாரி சந்திரசேகர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு, வைர வியாபாரி சந்திரசேகரும், அவரது மகள் ஜானகியும் இருந்தார்கள். விற்பனைக்கான வைரக்கல்லை, எங்களிடம் காட்டினார்கள்.எப்படி கிடைத்தது இந்த வைரக்கல் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றும், இதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்றும் சந்திரசேகரிடம் நாங்கள் அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், மதுரைரைய் சேர்ந்த அவருடைய நண்பர்

மாசாணம் என்பவர் இந்த வைரக்கல்லை கொடுத்து விற்று தருமாறு கூறியதாக எங்களிடம் தெரிவித்தார். 23 கோடி விலை போகும் மேலும் குறிப்பிட்ட வைரக்கல் கடந்த 3 மாதங்களாக தங்களிடம் இருப்பதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் இல்லை என்றும் சந்திரசேகர் தெரிவித்தார். மேலும் அந்த வைரக்கல், மிகவும் பழமையானது என்பதால் சர்வதேச மார்க்கெட்டில் ரூ.23 கோடிக்கு விலை போகும் என்றும் வைர வியாபாரி சந்திரசேகர் எங்களிடம் கூறினார்.1 கோடி தான் போகும் அந்த வைரக்கல்லை புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இது எவ்வளவு விலை போகும்

என்று நிபுணர்களிடம் கேட்டறிந்துவிட்டு, உங்களை வந்து சந்திப்பதாக சந்திரசேகரிடம் கூறிவிட்டு சென்றோம். ஆனால், அந்த வைரக்கல்லின் புகைப்படத்தை, சில நகை வியாபாரிகளிடம் காண்பித்து அது எவ்வளவுக்கு விலை போகும் என்று விசாரித்தோம், அது ரூ.1 கோடி வரை விலை போகும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர். பின்னர், கடந்த 3-ம் தேதி மீண்டும் சந்திரசேகர் வீட்டிற்கு சென்றிருந்தோம் 90 லட்சம் தர விரும்பினோம் வைர வியாபாரி சந்திரசேகரிடம், நீங்கள் வைத்திருக்கும் வைரக்கல்

ரூ.1 கோடிக்கு தான் விலை போகும் என பிரபல வைர வியாபாரிகள் கூறுகிறார்கள். எனவே, ரூ.90 லட்சம் வரை தருகிறோம் என்றும், மீதி ரூ.10 லட்சம் எங்களுக்கு கமிஷனாக தர வேண்டும் என்றும், சந்திரசேகரிடம் நாங்கள் தெரிவித்தோம். ஆனால், சந்திரசேகர் எனது நண்பர் சொன்னபடி ரூ.23 கோடி பணம் தந்தால் வைரத்தை தர தயாராக இருக்கிறேன், ரூ.90 லட்சத்துக்கு எல்லாம் வைரத்தை தர முடியாது என்று எங்களிடம் திட்டவட்டமாக கூறினார்.

The current image has no alternative text. The file name is: 495110814_1007180674892967_4412659708200433819_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *