குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள்

495061000_1007190408225327_456709603694052018_n.jpg

பகிடிவதையால் உயிரிழந்ததாக கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது . இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.புஸ்ஸல்லாவை – இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த 29 ஆம் திகதி பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக மாணவர் தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The current image has no alternative text. The file name is: 495061000_1007190408225327_456709603694052018_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *