இன்று மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்தது .
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது .
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 13,759 வாக்கெடுப்பு நிலையங்கள் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன .
இம்முறை, 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இவற்றில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்கள் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது .
தேர்தலில் 8,287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்றைய ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சிறந்த மட்டத்தில் இருந்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன.
சிறிய சம்பவங்களைத் தவிர, பாரியளவிலான சம்பவங்கள் பதிவாகவில்லை என்றும் Paffrel தெரிவித்துள்ளது.
இதேவேளை , வாக்குப் பெட்டிகளை எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, விரைவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கபடும் என தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை இன்று பிற்பகல் 2 மணி வரை , பல மாவட்டங்களில் வாக்குப்பதிவுகள் 40 சதவீத தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் – 54% , ரத்னபுரி – 50% ,வவுனியா – 49%,அம்பாறை – 48%
,பதுளை – 48% , மாத்தறை – 45% , கேகாலை – 45% ,
களுத்துறை – 45% , பொலன்னறுவை – 45% , மொனராகலை – 43%
,அம்பாந்தோட்டை – 42% , புத்தளம் – 40% , அனுராதபுரம் – 40%
,கொழும்பு -40% , கிளிநொச்சி – 39%, கம்பஹா – 36%,
யாழ்ப்பாணம் – 34% என்ற அடிப்படையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
