தெலுங்கானாவில் இன்று மாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.நம் நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக
�
இமயமலையையொட்டி பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் தான் இன்று திடீரென்று தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் குணுராம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் என்பது மாலை 6.50 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவு
�
செய்யப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தெலுங்கானாவின் குமுராம் பீம் ஆசிபாபாத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டரில் 3.8 என்று பதிவாகி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
