ஹெஸ்பொலா ஏவுகணைகள் இருப்பதாக கூறி கட்டடத்தை தாக்கிய இஸ்ரேல்
லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹெஸ்பொலா குழுவால் பயன்படுத்தப்படுவதாகக் கூறி ஒரு கட்டடத்தை காலி செய்ய உத்தரவிட்ட பின்னர், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
�
ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேல் இடையே ஐந்து மாதங்களுக்கு முன் போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல் நடத்திருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் அதன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் இருந்த இடத்தை குறிவைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
இந்தத் தாக்குதலை கண்டித்துள்ள லெபனான் அரசாங்கம், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும்படி வலியுறுத்துமாறு போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
