படக்குறிப்பு, பாகிஸ்தானின் ஏவுகணை, தெற்காசியாவை தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது
21 டிசம்பர் 2024
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணை என்றும் அமெரிக்க அதிபர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பாகிஸ்தானின் ஏவுகணை திட்டம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் நோக்கம் என்ன, பாகிஸ்தான் இதனை வைத்து என்ன செய்ய திட்டமிடுகிறது என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபின்னர் கூறுகிறார்.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தலாக மட்டுமே இருக்கும் என்பதைத் தவிர வேறு எந்த வழியிலும் இதை பார்க்க முடியாது” என்று கானகி எண்டவ்மேன்ட் பார் இண்டர்நேஷ்னல் பீஸ் எனும் சிந்தனைக்குழு கூட்டத்தில் ஜான் ஃபின்னர் கூறினார்
நவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. இதில் நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் முதல் பெரிய ராக்கெட் மோட்டார்களை சோதனை செய்யும் திறன் கொண்ட சாதனங்கள் வரை அடங்கும். ஒரு சில நாடுகளிடம் மட்டுமே அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் இருக்கின்றன. இந்த நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அவை ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆகும்” என ஃபின்னர் கூறியுள்ளார். இது BBC. நியூஸில் இருந்து தொகுக்கப்பட்டது
