காஷ்மீர் எல்லையில் தாக்குதலை துவக்கி வைத்த பாகிஸ்தான்

492520190_999026252375076_2739345513573618210_n.jpg

தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் – இந்திய இராணுவம் பதிலடி இந்திய எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

மேலும் எல்லை பகுதியில் ஒருசில இடங்களில் சிறிய அளவில் துப்பாக்கிச் சூடுகளை பாகிஸ்தான் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும் அதற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப் பொறுப்பேற்றுள்ளது.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பயங்கரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

மேலும் , பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகின்றது.

The current image has no alternative text. The file name is: 492520190_999026252375076_2739345513573618210_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *