டிரம்ப் அறிவிப்பால் முதல் இழப்பு.. 800 ஊழியர்கள் பணிநீக்கம்.. அமெரிக்க மக்கள் ஷாக்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேக் அமெரிக்கா கிரேட் அகெயின் என்ற கொள்கையின் கீழ் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இது அனைத்தும் வானில் எறிந்த பந்து போல திரும்ப அமெரிக்காவையே பாதித்தது. முதலில் கனடா, மெக்சிகோ, சீனா மீது வரி, அதன் பின்பு 75 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி விதித்தார் டிரம்ப். இவருடைய அறிவிப்பு முதல் சில நாட்களில் டாலர் மதிப்புக்கும், பத்திர சந்தைக்கும் சாதகமாக இருந்தாலும் அதன் பின்பு
�
அமெரிக்கா எந்த அளவுக்கு உலக நாடுகளை நம்பியுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்தது மூலம் பெரும் சரிவை சந்திக்க துவங்கியது.இதன் அடிப்படையில் 75 நாடுகள் மீது விதிக்கப்பட்ட ரெசிப்ரோக்கல் வரி அமெரிக்க ஆட்டோமொபைல் துறையை அதிகளவில் பாதித்துள்ளது. ஏற்கனவே இதுக்குறித்து அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டிரம்ப்-யிடம் முறையிட்ட நிலையில் தற்போது வால்வோ முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வோல்வோ குழுமம் அமெரிக்காவில் உள்ள தனது முக்கிய உற்பத்தி
�
ஆலைகளில் தொழிலாளர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்த ஆட்டோமொபைல் நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் மூன்று முக்கிய ஆலைகளில் சுமார் 550 முதல் 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் பென்சில்வேனியாவின் மாகுங்கி நகரில் அமைந்துள்ள மேக் டிரக்ஸ் ஆலையும், வர்ஜீனியாவின் டப்ளின் ஆலையும் மற்றும் மேரிலாந்தின் ஹேகர்ஸ்டவுன் ஆலையும்
�
அடக்கம். இந்த 3 முக்கிய இடங்களில் உள்ள 3 வோல்வோ குழுமத்தின் தொழிற்சாலைகளில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக வோல்வோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வோல்வோ குழுமம் வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 20,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகும். தற்போது அறிவிக்கப்பட்ட 800 ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு அடிப்படை முக்கிய காரணம், டிரம்ப் விதித்த வரியும்,
�
வர்த்தக தடை வாயிலாக உருவான நிலையற்ற பொருளாதாரச் சூழலின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து தான் உதிரிபாகங்களையும், முக்கிய பாகங்களையும் இறக்குமதி செய்து முழு வாகனமாக தயாரிக்கிறது. தற்போது ஆட்டோமொபைல் துறை மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தயாரிப்பதில் பெரும் சவால் உள்ளது. இதேபோல் வரியோடு பொருட்களை இறக்குமதி செய்தால் வாகனத்தின் விலையும்
�
அதிகரிக்க கூடும், விலை அதிகரித்தால் வர்த்தகம் குறையும். இதனால் வோல்வோ உட்பட பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் அடி: இதுவரையில் டிரம்ப் வரியால் டெக் துறை மட்டுமே பணிநீக்கம் அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோமொபைல் துறையில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
