இன்றைய வானிலை Pothikai.fm

download-6-8.jpeg

இன்றைய வானிலை Pothikai.fm
2025.04.10

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய ,சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் கத்திகுச்சி,களங்குட்டிய,கல்மில்லெவ, இபலோகம, பளுகஸ்வெவ மற்றும் ஹபரன போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

கடல் பிராந்தியங்களில்
***************************

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், காலி ,ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியின் மத்தியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் காணப்படும். இதன் பிற்பாடு தொடர்ந்து வருகின்ற 24 மணித்தியாலங்களில் படிப்படியாக நலிவடைந்து வங்காள விரிகுடாவின் மத்தியை சென்றடையும்.

குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியத்தில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 60 km வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழையும் பெய்யக்கூடும்.இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஆகையினால் இக் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வுகூறல்களை கவனத்திற்கொண்டு மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *