வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

488462470_980593297551705_42446301897134443_n.jpg

தொடங்கொட கலனிகம அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம நோக்கி 25.5 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனங்களில் இரண்டு லொறிகள், சொகுசு வேன் மற்றும் கார் ஒன்றும் அடங்கும்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்றும், வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற சொகுசு வேனும் லொறியின் வலது பின்பக்கத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதேநேரம், பின்னால் வந்த காரும் வேன் மீது மோதியதுடன், விபத்தில் பாதுகாப்பு வேலியும் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *