அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

download-31.jpeg

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு அம்பலாங்கொடை, மாதம்பே பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு சிறு குழந்தை இன்று (10) கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இரண்டு மாத வயதுடைய ஒரு ஆண் குழந்தை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை தலைமையக ஆய்வாளர் பிரசன்ன அல்கிரியகேவுக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, சாலையோரத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாக பலபிட்டிய ஆதார மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *