அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

download-1-7.jpeg

பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு பணிப்பாளர் நாயகம் நியமனம் தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எச்.எம்.யூ.ஹேரத் அவர்களின் ஒப்பந்த சேவைக்காலம் எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.

அதற்கமைய, 07ஆம் திகதி முதல் வெற்றிடமாகவுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயக பதவி வெற்றிடத்திற்கு ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களை ஒப்பந்த சேவை அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *