வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
