புதுக்கடை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தில் நீதிமன்றத்துக்கு ரிவோல்வரை கொண்டுவந்த பெண்ணோடு தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு காவல் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் கீழ் நீதிமன்றப் பணியில் நியமிக்கப்பட்ட பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) இவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸ் அதிகாரி பாதெனியவைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் இஷாரா சேவ்வந்தி என்ற பெண்ணுடன் இந்த பொலிஸ் அதிகாரி தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொலிஸ் அதிகாரி CCDக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.�
நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் பணிபுரியும் இந்த சந்தேக நபர், பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.�
கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.�
முதற்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
