கிளிநொச்சி, விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

download-40.jpeg

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி நடந்து சென்ற ஒருவரை அதே திசையில் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தில் பரந்தன் காஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *