144 திருப்பரங்குன்றம் விவகாரம்: மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு அமல்… மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு துரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றவர்களின் அசைவ உணவு புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதால், இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்தது
மதுரையில் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது.
இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றவர்கள் அங்கு அசைவ உணவு உண்டதாக படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
