செந்தில் தொண்டமான் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற ஊழல்

24-65c08d02174fa-1.jpeg

செந்தில் தொண்டமான் நிர்வாகத்தின் ஊழல் முறைகேடுகளை ஆராய விசாரணைக்குழு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் செந்தில் தொண்டமான் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை ஆராய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த செந்தில் தொண்டமான், அரசாங்க வாகனங்கள், வளங்கள் மற்றும் நிதி துஷ்பிரயோகம் செய்தது, முறைகேடான பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கியிருந்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, செந்தில் தொண்டமான் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை ஆராய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

செந்தில் தொண்டமான் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் தொடர்பில் தற்போது ஆளுனர் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஏராளம் முறைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ள முறைப்பாடுகள் என்பன குறித்த விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் முறைப்பாடுகளின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, பொருத்தமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *