14 வயது சிறுமி, மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை

25-679c5eb729602.jpeg

பச்சை குத்தச் சென்ற 14 வயது சிறுமி, மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள ஒரு பச்சை குத்தும் நிலையத்துக்கு நேற்று முன்தினம் (29) சீல் வைக்கப்பட்டது.பலவந்தமாக பாலியல் வன்கொடுமை
அங்கு 14 வயது சிறுமி ஒருவர் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பச்சை குத்தும் நிலையம் சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கவும், முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்று, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் , பச்சை குத்தும் நிலையத்தில் பணிபுரியும் பல இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக நெல்லியடி காவல்துறையினருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையத்திற்கு பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான ஏராளமான ஆதாரங்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை பச்சை குத்தும் நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக நெல்லியடி போலீசார் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *