ஹபரணை மின்னேரிய வீதியின் 07 ஆம் மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று 29 காலை 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது
