வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க நிதி அமைச்சு வர்த்மானியொன்றை நேற்று

download-1-41.jpeg

பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள், 10 – 16 சீட் கொண்ட வேன்கள், லொரி, டபல் கெப் வாகனங்கள் இறக்குமதி செய்ய மட்டுமே
வாகன இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியை இரத்து செய்து வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க நிதி அமைச்சு வர்த்மானியொன்றை நேற்று வெளியிட்டிருந்தது.

குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள், 10 – 16 சீட் கொண்ட வேன்கள், லொரி, டபல் கெப் வாகனங்கள் இறக்குமதி செய்ய மட்டுமே குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனிப்பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மேலே உள்ள வாகன இறக்குமதிக்கு அமைவாக வரி அறவீடு குறித்த எந்த தகவல்களும் இல்லை என்றும் அதனையும் அரசு விரைவில் வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *