செருப்பு, துடைப்பத்தால் சீமான் படத்தை ஆவேசமாக அடித்த பெண்கள்.. ஒப்பாரி வைத்த பெரியார் ஆதரவாளர்கள் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆவேசமாக
சீமானின் உருவப் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து கொந்தளித்துள்ளனர்.தந்தை பெரியார் குறித்து அண்மைக்காலமாக சீமான் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார். அவர் பேசுவதற்கு ஆதாரம் கேட்டால், பெரியார் புத்தகங்களை நாட்டுடையாக்கிமானால், தான் ஆதாரத்தைக் காட்டுவதாக கூறினார். தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தந்தை பெரியாரை இழிவுபடுத்துகிற சீமான் வீடு இன்று
முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்து, இன்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு அருகே திரண்டனர். இந்நிலையில், சீமான் வீட்டு முன்பாக நாம் தமிழர் கட்சியினர் மகளிர் அணியினர் கையில் உருட்டு கட்டைகளுடன் திரண்டனர். சீமானின் வீட்டை முற்றுகையிட வந்தால் வெட்டுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
