மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாச குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக உன்னிச்சை குள திட்ட முகாமையாளர் செ. மேகநாதன் தெரிவித்தார்.01 செக்கனுக்கு 3425 கன அடி திறந்தது விடப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.
இதனால் மட்டக்களப்பு மாவட்டம் பெரிதும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் உன்னிச்சை குளத்தை அண்டி காணப்படும் தாழ்நிலங்களில் காணப்படும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
