போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்த மணிப்பூர்

download-3-20.jpeg

போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்த
ஆன்லைன் மூலமாக ஐடி ஊழியர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் அடையாறு, தரமணி,

திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆன்லைன் செயலி மூலமாக வலி நிவாரணி மாத்திரைகளை, சிலர் போதைக்காக விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்மீதான விசாரணையில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த வங்லியான்சிங் (30) என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான வங்லியான்சிங்கிடம் இருந்து 8,100 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *