உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக

download-16-8.jpeg

செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் (Anuradhapura) மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உள்நாட்டு போர் தகவல்களை இந்திய ஊடகத்துக்கு வழங்கியமை

உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக வெளியிட்டது தொடர்பாக அனுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இந்தியாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தமையால் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என அவர் தரப்பு வழக்கறிஞர் மன்றில் தெரிவித்திருந்தார்.

அதோடு நீதிமன்றத்தால் வழங்கப்படும் அடுத்த திகதியில் அவர் முன்னிலையாக தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.எனினும் வழக்கறிஞர் கூறிய காரணங்களை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *