மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது முதலையொன்று
திருகோணமலை -மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மூதூர் ஷாபிநகர் கிராமத்திற்குள் நேற்று (17) முதலை உள் நுழைந்துள்ளது. இதனை அவதானித்த பிரதேச இளைஞர்கள் முதலையை மடக்கி பிடித்திருந்தனர்.குறித்த முதலை பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் இன்று (18) விடுவிக்கப்பட்டுள்ளது.
