இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்களும் செய்தியைக் கொண்டாடியுள்ளனர்.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் – முழு விவரம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும்
ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது என, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
காஸாவில் உள்ள பாலத்தீனர்களும் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்களும் இந்தச்
செய்தியைக் கொண்டாடியுள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது.
இந்த ஒப்பந்தம் வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
