புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

download-1-19.jpeg

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது   பொங்கல் திருவிழாவின் முக்கிய அம்சமாக மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று  ஜன.14 ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாட்டு பொங்கல் தினமான இன்று (ஜன. 15 புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு என மொத்தம் 120 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். காளையின் உடல்நிலை, பதிவு எண், கொம்பின் அளவு உள்ளிட்ட அம்சங்கள் சரிபார்க்கப்பட்டன.

பரிசோதனையின் போது அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசாருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *