1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக

download-6-14.jpeg

ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு நபருக்கும் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தனி சாளரம் திறக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த சாளரத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு கடவுச்சீட்டுகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *