17 வயதான சிறுவனே கைதாகியுள்ளார்

download-2-17.jpeg

யாழ்ப்பாணத்தில் , வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவனே கைதாகியுள்ளார்.

கைதான சிறுவன் , வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து , அவற்றை ரிக் ரோக் தளத்தில் பகிர்ந்து வந்துள்ளார். இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன் , சிறுவனிடம் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *