நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா என்று தி.மு.க.,வுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரையில் பா.ஜ.. மகளிர் அணியினர் தடையை மீறி நீதி பேரணி செல்ல முயன்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய மாஜி உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், சென்னையில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது;
பாலியல் குற்றங்களில் இது அந்த மாநிலம், இந்த மாநிலம் என்று அரசியலில் கம்பேர் செய்யாதீர்கள். நான் இப்போது தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தை பற்றியே தான் அதிகம் பேசுவேன்.
