ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு

24-675053cf5a057.jpg

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின் மக்களை செல்ல அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது

முழு விவரங்களுக்கு

https://www.pothikai.news

அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று 4 இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டார்.

ஆளுநருடன் , யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதேவேளை யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றார்.

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின் மக்களை செல்ல அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *